/indian-express-tamil/media/media_files/CQiGxMLylxRQJIqtFwk8.jpg)
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Tuticorin VAO Murder case : தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை அவரது அலுவலகத்துக்குள் இரண்டு பேர் அரிவாளால் வெட்டினர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் மதியமே அவர் உயிரிழந்தார்.
இந்தக் கொடூரச் சம்பவம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி நடந்தது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் ஆகியோரும் நேரில் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கை நீதிபதி செல்வம் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
வி.ஏ.ஓ கொலை வழக்கில் 5 மாதத்தில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதுவும இந்த வழக்கின் விசாரணை சரியாக 21 நாள்களில் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.