பைக் திருடி செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் செல்லும் வழியில் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

இரவில் பைக் திருடி, பகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 நபர்கள் பொள்ளாச்சி அருகே விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரவில் பைக் திருடி, பகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 நபர்கள் பொள்ளாச்சி அருகே விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Pollachi

Pollachi

கோவையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடை வீதி பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை இரவில் ஒரு கொள்ளை கும்பல், திருட்டு வாகனத்தில் வந்து கொள்ளை அடித்து சென்றது. அதன் சி.சி.டிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

இந்நிலையில் பொள்ளாச்சியில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் கொண்ட பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் ஒரு பெண் கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயினை பறித்துவிட்டு தப்பினர்.

அந்த கொள்ளை கும்பலை பிடிக்க பொதுமக்கள் காவல் துறையினரை வலியுறுத்தினர்.

வழிப்பறி கொள்ளை கும்பலை பிடிக்க காவல் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்த
நிலையில் பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் நடைபெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கோவையில் இரு சக்கர வாகனத்தை திருடி, பொள்ளாச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிய வந்தது.

Advertisment
Advertisements

மேற்கொண்டு நடைபெற்ற விசாரணையில், இறந்த இருவரில் ஒருவர் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பது தெரிய வந்துள்ளது. உயிரிழந்த மற்றொரு நபர் குறித்து பொள்ளாச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: