/tamil-ie/media/media_files/uploads/2018/03/police-immolation.jpeg)
சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 போலீஸ்காரர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரகு, கணேஷ். இவர்கள் இருவரும் தேனி ஆயுதப்படை அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் டிஜிபியை சந்தித்து புகார் மனு கொடுக்க வந்திருந்தனர்.
டிஜிபியை சந்திக்க இருவரும் நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போது அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த, மண் எண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டனர். இதை கவனித்த அருகில் இருந்த போலீசார், அவர்கள் இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
பின்னர் இருவரையும் உயர் அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்தினர். அவர்கள் புகார்களைப் பெற்றுக் கொண்டனர். ‘‘நாங்கள் ஆயுதப்படை காவலர்களாக பணியாற்றி வருகிறோம். எங்கள் இன்ஸ்பெக்டர், எங்களை ஜாதி ரீதியாக புறக்கணிக்கிறார்கள். வேறு இடங்களுக்கு மாற்றுகிறார்கள். இதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தள்ளிப் போய்விட்டது. இதனால் பெரும் மன அழுத்தம் ஏற்பட்டது. அதனால்தான் தற்கொலைக்கு முயன்றோம் என தெரிவித்தனர்.
காவலர்களின் புகார்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக, உயர் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.