/tamil-ie/media/media_files/uploads/2022/10/police-1-3-2.jpg)
சேலம் ஓமலூர் காவல்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரித்ததாக 2 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய்பிரகாஷ்(25), எருமாபாளையத்தை சேர்ந்த நவீன்சக்கரவர்த்தி(25). இவர்கள் இருவரும் விநாயகம்பட்டியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து துப்பாக்கி தயாரித்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் , காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இருவரிடம் விசாரணை மேற்கொண்டு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது அங்கு துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான பொருட்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் என்.ஐ.ஏ அதிகாரிகள் சேலம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் துப்பாக்கி தயாரித்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் மேல் விசாரணை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் இருவரும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.