New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/savadi.jpg)
தமிழ்நாட்டில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. தங்களது தேர்தல் அறிக்கையில் டோல் கேட்டுக்கு எதிராக வாக்குறுதிகள் அளித்துள்ளன.
00:00
/ 00:00
தமிழ்நாட்டில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. தங்களது தேர்தல் அறிக்கையில் டோல் கேட்டுக்கு எதிராக வாக்குறுதிகள் அளித்துள்ளன.
தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் புதிதாக 20 டோல்கேட்கள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், நாடு முழுக்க புதிதாக 65 டோல்கேட்டுகள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அவினாசி திருப்பூர் வேலம்பட்டி டோல் பிளாசா மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
மதுரை செட்டிக்குளம் நத்தம் துவரங்குறிச்சி பரளி புதூர் டோல் பிளாசா பிப்.8ஆம் தேதி முதல் அலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் புதிதாக 20 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன.
அந்த டோல்கேட்டுகள் பெங்களூரு- சென்னை எக்ஸ்பிரஸ் வே பகுதியில் 6 ஆகவும், சித்தூர்-தச்சூர், விக்ரவாண்டி-சேத்தியாதோப்பு-சோழபுரம்- தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் தலா 3ம், விழுப்புரம்-நாகப்பட்டினம் ஈசிஆர் பகுதியில் 3ம், ஓசூர்- தர்மபுரி பகுதியில் 3ம் அமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. தங்களது தேர்தல் அறிக்கையில் டோல் கேட்டுக்கு எதிராக வாக்குறுதிகள் அளித்துள்ளன.
இந்த நிலையில், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 20 டோல்கேட்டுகள் அமைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.