சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் வழித்தடத்தில் பொன்னேரி - கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு இன்று மற்றும் ஏப்ரல் 5 ஆகிய நாட்களில் 21 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்களில் பயணிகள் வசதிக்காக 10 சிறப்பு ரெயில்கள் சென்னை - எண்ணூர் இடையே இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரங்கள்:
1. சென்ட்ரல் - சூலுார்பேட்டை அதிகாலை 5:40, காலை 10:15, 10:30, 11:35 நண்பகல் 12:10, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மதியம் 1:40 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.
2. சூலுார்பேட்டை - நெல்லுார் காலை 8:10, சூலுார்பேட்டை - சென்ட்ரல் மதியம் 12:35, 1:15, 3:10 ஆவடி - சென்ட்ரல் காலை 4:25 மணி ரயில்கள் ரத்து செய்யப்படும்
3. கடற்கரை - கும்மிடிப்பூண்டி நண்பகல் 12:40, மதியம் 2:40, கும்மிடிப்பூண்டி - கடற்கரை மாலை 4:30 மணி ரயில்கள் ரத்து செய்யப்படும்
4. கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் மதியம் 1:00, 1:15, 2:30, 3:15, 3:45, நெல்லுார் - சூலுார்பேட்டை காலை 10:20 மணி ரயில்கள் ரத்து செய்யப்படும்
5. செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி காலை 9:55 மணி ரயில் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்
6. கும்மிடிப்பூண்டி - தாம்பரம் மாலை 3:00 மணி ரயில் கடற்கரையில் இருந்து இயக்கப்படும்
சென்னை - எண்ணூர் வழித்தட சிறப்பு ரயில்கள்
1. சென்ட்ரல் - பொன்னேரிக்கு காலை 10:30, மீஞ்சூருக்கு காலை 11:35, மதியம் 1:40, கடற்கரை - எண்ணுாருக்கு பகல் 12;40 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
2. கடற்கரை - பொன்னேரிக்கு மதியம் 2:40, பொன்னேரி - சென்ட்ரலுக்கு மதியம் 1:18 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
3. மீஞ்சூர் - சென்ட்ரலுக்கு மாலை 3:00, 3:56, மாலை 4:14, சென்னேரி - கடற்கரை மாலை 4:47 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
இவ்வாறு சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.