/tamil-ie/media/media_files/uploads/2023/06/rain-main.jpg)
Rain
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், அரியலூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருபத்தூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபோல திருச்சியில் சில இடங்களில் மற்றும் பெரம்பலூரில் உள்ள இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இதுவரை மழை பெய்துள்ளது. கடந்த வாரத்தில் சென்னையில் ஒரே நாளில் அதிக மழை பெய்தது.தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.