/indian-express-tamil/media/media_files/0hyV2BPnrXsHaFd5cbC3.jpg)
கோவை தொண்டாமுத்தூர் அருகே குரும்ப பாளையம் டீச்சர்ஸ் காலனி உள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (70).
இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று (பிப்.27) இரவு சுமார் 10.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் விஜயலட்சுமியின் வீட்டின் பின் கதவு வழியாக உள்ளே நுழைந்து, அவரை கத்தியை காட்டி மிரட்டியதோடு அவரை சேலையால் கட்டிப் போட்டுள்ளனர்.
ஆசிரியையை கட்டிப் போட்டு 25 சவரன் நகைகள் கொள்ளை; அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சி#Coimbatorepic.twitter.com/bJRaIOCDP6
— Indian Express Tamil (@IeTamil) February 28, 2024
இதன்பின் அவர் அணிந்து இருந்த 11 சவரன் தங்க நகைகள் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என 25 சவரன் நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி தொண்டாமுத்தூர் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் அளித்தார். தகவலின் பேரில் வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து 3 தனிப் படைகள் அமைத்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.