/tamil-ie/media/media_files/uploads/2022/06/ops.jpg)
3 more ADMK district secretaries move from OPS to EPS: ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்த 3 மாவட்டச் செயலாளர்கள், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவியதால், ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்து நிலையில், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தங்களுக்கான ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். இதில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆதரவு இ.பி.எஸ்-க்கு இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 75 மாவட்டச் செயலாளர்களில் 60 பேரின் ஆதரவு இ.பி.எஸ்-க்கு உள்ளதாக கூறப்பட்டது. அதேநேரம் ஓ.பி.எஸ்-க்கு 12 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதையும் படியுங்கள்: அதிமுக பொதுக்குழு பாதுகாப்பு: போலீசாரின் 31 கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் பதில்
இந்நிலையில், நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா மற்றும் விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் ஆகியோர் திடீரென இன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதேபோல், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் அலக்சாண்டரும் இ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாளராக இருந்த 12 மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை தற்போது 9 ஆக குறைந்துள்ளது.
இப்போதைய நிலவரப்படி, தேனி மாவட்ட செயலாளர் சையது கான், சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் அசோகன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் வைத்தியலிங்கம், வடக்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன், அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஆகிய 9 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.