Advertisment

சிதம்பரத்தில் கனமழை: நடராஜர் கோயில் கோபுரத்தில் சிலைகள் சேதம்

சிதம்பரத்தில் கனமழை பெய்து வருவதால் நடராஜர் கோயில் கோபுரத்தில் உள்ள 3 சிலைகள் சேதம் அடைந்தன.

author-image
WebDesk
New Update
chidambaram

நடராஜர் கோயில் கோபுர சிலைகள் சேதம்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது.

Advertisment

இந்த மழையால் உலக பிரசித்திபெற்ற நடராஜர் கோயிலின் மேற்கு கோபுரத்தில் 2ஆம் அடுக்கில் இருந்த 2 துவாரக பாலகர் சிலைகளும், மற்றொரு சிலையில் உள்ள இடது கால் பகுதியும் இடிந்து விழுந்தன.

அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சிலர் சிலை விழுந்ததை பார்த்து தெரிவித்ததையடுத்து  பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
 
இதனிடையே தகவல் அறிந்து வந்த கோயில் பொது தீட்சிதர்கள் உடைந்த சிலைகளை பார்வையிட்டனர். கீழே விழுந்த சிலைகளை ஊழியர்கள் அப்புறப்படுத்தி கோயில் மேற்கு சன்னதி வாயிலை பக்தர்கள் யாரும் செல்லாத வகையில் அடைத்தனர்.  

சிலைகள் சேதமானதால் ஆகம விதிகளின்படி பரிகார பூஜைகள் நடத்தவும், நீதிமன்ற உத்தரவு பெற்று புதிய சிலைகள் அமைக்கவும் பொதுதீட்சிதர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisment
Advertisement

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chidambaram Chidambaram Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment