Advertisment

பதவி உயர்வுக்கு லஞ்சம்… எழிலகத்தில் ரூ35 லட்சம் பறிமுதல்

அலுவலகத்தில் பணிபுரியும் 30 உதவியாளர்களிடமிருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக தலா ரூ5 லட்சம் லஞ்சம் பெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

author-image
WebDesk
New Update
கோவை போக்குவரத்து இணை ஆணையர் காரில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; ரூ.28 லட்சம் பறிமுதல்

சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Advertisment

சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு இணை ஆணையரக மற்றும் துணை ஆணையரக அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

இந்நிலையில், துணை ஆணையர் நடராஜன், தனது துறையில் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற தகுதியுடையவர்களிடம் ரூ3 லட்சம் முதல் ரூ5 லட்சம் வரை பணம் பெற்றதாக லஞ்சம் ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

publive-image

தகவலின்பேரில், துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்புத் துறை திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத ரூ.35 லட்சம் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dvac Raid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment