/indian-express-tamil/media/media_files/wz1Xgd1OqMZ72ZJLP4oN.jpg)
தமிழக அரசு 48 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு 48 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது, 32 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 48 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளா. இதில், 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 32 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு புதிதாக காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
16 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
* ஐ.ஜி ஆர். தமிழ் சந்திரனுக்கு கூடுதல் டி.ஜி.பி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு கூடுதல் டி.ஜி.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எஸ் அதிகாரி வி. ஜெயஸ்ரீக்கு ஐ.ஜி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சென்னையில் காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரிக்கு ஐ.ஜி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஜி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.லஷ்மி சென்னையில் ஆயுதப்படை பிரிவு ஐ.ஜி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.ஜி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி எஸ். ராஜேஸ்வரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.ஜி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி எஸ். ராஜேந்திரன் ஆவடியில் தலைமையகம், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி எம்.எஸ். முத்துசாமி தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியின் கூடுதல் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.ஜி.-யாக பதவி உயர்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி மயில்வாகனன் அமலாக்கப் பிரிவு ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்
டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்றுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி பி.ஆர். வெண்மதி, சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி-யாக இருந்த சரோஜ் குமார் தாக்கூருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு வேலூர் சரக டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தெற்கு போக்குவரத்து பிரிவு டி.சி.பி மகேஷ் குமார் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் உள்பட 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 32 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடம் செய்யப்படுள்ளனர்.
சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை ஆணையராக பாண்டி கங்காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகர தெற்கு காவல் துணை ஆணையராக இருந்த கே.சண்முகம் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி-யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை எஸ்.பி. சிவபிரசாத், தேனி எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி எஸ்.பி. டோங்கரே பிரவீன் ரமேஷ், மதுரை எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை, கிருஷ்ணகிரி எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பரங்கிமலை காவல் துணை ஆணையர் தீபக், விழுப்புரம் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக சந்தீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக பெரோஸ் கான் அப்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.