/tamil-ie/media/media_files/uploads/2018/08/weather.jpg)
weather, வானிலை
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை அறிக்கை:
தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் இயக்குநர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் வடமேற்கு வங்கக்கடலில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதுவே கனமழைக்கு காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இன்று கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.