Advertisment

ஏற்காடு மலையில் பேருந்து விபத்து; 5 பேர் உயிரிழப்பு

ஏற்காடு மலையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 45க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

author-image
WebDesk
New Update
5 killed in Yercaud mountain bus accident

ஏற்காடு மலை பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Salem District | தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வருவதால், அந்த வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என பலரும் சுற்றுலா செய்துவருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளுடன் ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து 11ஆவது கொண்டை ஊசி வளைவில் விபத்தை சந்தித்தது.

அதாவது வளைவில் திரும்பும்போது பேருந்து 50 அடி கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த தடுப்பில் மோதி 50 அடி பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்தில் ஒரு சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 45க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். காயம் அடைந்த நபர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

 

Salem District
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment