சென்னையில் இரவில் பயணம் செய்யும்போது பாதுகாப்பற்றதாக உணர்வதாக இருசக்கர வாகன ஒட்டிகள் சுமார் 50% பேர் கூறியுள்ளனர். இந்த உணர்வு பெரும்பாலும் தெரு விளக்குகள் மற்றும் குற்றச்செயல்களின் பயம் காரணமாக உள்ளது என்று சென்னை மாநகராட்சி (GCC) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்கிய தீர்வு என்னவென்றால் கூகுள் மேப், குற்றச் செயல்கள் தொடர்பான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு "நைட்மோடு" பாதை அறிக்கைகள், நைட்மோடு வழித்தட பரிந்துரை மற்றும் Google Maps-ல் SOS எச்சரிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வு Google Map-ஐ வழிகாட்டியாக பயன்படுத்தும் பயனர்களை மட்டும் மையமாக கொண்டு நடத்தப்பட்டது. மேப்பில் பாதுகாப்பற்ற பாதைகள், குற்றச் செயல்கள் நடைபெறும் இடங்களை பற்றி எச்சரிக்கைகள், மாற்று பாதைகள் போன்றவை சுட்டிக்காட்டப்பட வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறினார். நகரில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பேருந்து முடிவிடங்களில் நடைபாதைகள் மற்றும் தெரு விளக்குகளை சீரமைக்கும் பணியும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது என்றார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, சென்னை மாநகராட்சியின் Gender Lab மூலம் நடத்தப்பட்டது. இதில் 423 இருசக்கர வாகன ஓட்டுநர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் கூறியதாவது, கே.கே. நகர் அருகே உள்ள நெசப்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் போன்ற சில பகுதிகள் குறிப்பாக பாதுகாப்பற்றவையாக உள்ளன. பங்கேற்றவர்களில் பாதி பேர், சாலைகள் பாதுகாப்பற்றதாக இருப்பதாகக் காட்டும் வகையில் 5-க்கு 3 அல்லது அதற்கும் குறைவான மதிப்பீடுகளை அளித்தனர். இரவில் சாலைகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன (5 மதிப்பெண்கள்) என்று 16.8% பேர் கூறினர், மேலும் 33.8% பேர் 4 மதிப்பெண்கள் அளித்தனர். ஆய்வில் பங்கேற்ற பெண்களில் குறைந்தது 60% பேர், சாலைகள் இருட்டாக, வெளிச்சமில்லாமல் தனிமையாக இருப்பதாகக் கூறினர். மேலும் 30% பேர் திருட்டு அல்லது வேறு வகை குற்றச்செயல்களுக்கு பயம் இருப்பதாகத் தெரிவித்தனர். 42.7% பேர், பாதுகாப்பற்ற பாதைகளைத் தவிர்க்கிறோம் என்று குறிப்பிட்டனர்.
ஒரு பெண் பங்கேற்பாளர் கூறியதாவது: நுங்கம்பாக்கத்திலுள்ள காஞ்சி காமாகொடி குழந்தைகள் நம்பிக்கை மருத்துவமனை அருகே உள்ள சாலை இரவில் குறைந்த அளவில் மட்டுமே வெளிச்சம் இருப்பதாகவும், மாலைக்குப் பின் பல நோயாளிகள் அந்தப் பகுதிக்கு வந்து செல்கின்றனர் என்று வேதனை தெரிவித்தார். ஆய்வில் பங்கேற்றவர்களில் ஒருவரான அர்ஜுன் கூறுகையில், இரவில் கார்கள் கூட பாதுகாப்பானவை, ஏனெனில் சாலைகள் மோசமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களையும் பிற தடைகளையும் கவனிக்காமல் போகலாம். ஆய்வில் பதிலளித்தவர்களில் குறைந்தது 60% பேர் 26 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், அதே நேரத்தில் 35% பேர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
நன்றி: 