ஆன்லைனில் ரூ. 5.10 கோடி மோசடி: முக்கிய நபர் கேரளாவில் கைது - போலீஸ் எச்சரிக்கை!

நிறுவன உரிமையாளர் போல ஆள்மாற்றம் செய்து, 5 கோடியே 10 லட்சம் ரூபாய் இணையவழி மோசடி செய்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையவழியில் முன் பின் தெரியாத நபர்களிடம் எந்த முதலீடும் செய்து ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

நிறுவன உரிமையாளர் போல ஆள்மாற்றம் செய்து, 5 கோடியே 10 லட்சம் ரூபாய் இணையவழி மோசடி செய்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையவழியில் முன் பின் தெரியாத நபர்களிடம் எந்த முதலீடும் செய்து ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

author-image
WebDesk
New Update
online mosadi

ஆன்லைனில் ரூ. 5.10 கோடி மோசடி: முக்கிய கூட்டாளி கேரளாவில் கைது - போலீஸ் எச்சரிக்கை!

நிறுவன உரிமையாளர்போல ஆள்மாற்றம் செய்து, 5 கோடியே 10 லட்ச ரூபாய் இணையவழி மோசடி செய்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடியில் முக்கியமாக, போலி வங்கிக் கணக்குகளை வாங்கிக் கொடுத்து நிறுவனத்தின் பணத்தை மாற்றிய முக்கிய நபரான சீனு ராமகிருஷ்ணன் (45), கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இணையவழிப் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Advertisment

மோசடியின் பின்னணி:

மோசடிக்காரர்கள், சீனு ராமகிருஷ்ணன் வாங்கிக் கொடுத்த வங்கிக் கணக்கில் ₹1 கோடியே 80 லட்ச ரூபாய் பணத்தை மாற்றி, அதை பல்வேறு நபர்களுக்கு அனுப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடிப் பணப் பரிமாற்றத்தில் சீனு ராமகிருஷ்ணனின் பங்கு முக்கியமானது என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள், வங்கிக் கணக்குகளைத் திறந்து கொடுத்த நபர்களை அவர்களின் செல்போன்களுடன் டெல்லிக்கு வரவழைத்து, அவர்கள் கணக்கிற்கு வந்த பணத்தை மற்ற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இணையவழி குற்றங்களுக்குப் பொறுப்பேற்றுள்ள முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், இணையவழிப் போலீசாரின் தனிப்படை ஆய்வாளர்களான தியாகராஜன், கீர்த்தி மற்றும் தலைமை காவலர்கள் மணிமொழி, ராஜகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் சீனு ராமகிருஷ்ணனை கைது செய்தனர். அவர் இன்று தலைமை குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment
Advertisements

முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். "உங்களுடைய சிம் கார்டு, வங்கிக் கணக்கு அல்லது புதிய வங்கிக் கணக்கை துவக்கித் தருவது போன்ற எந்தச் செயலையும் செய்ய வேண்டாம். இணையவழி மோசடிக்காரர்கள் இதுபோன்ற வங்கிக் கணக்குகளில் மோசடி செய்த பணத்தைப் போட பயன்படுத்துவதால், வங்கிக் கணக்கு யார் பெயரில் உள்ளதோ, அவரே மோசடி செய்த முழுப் பணத்திற்கும் பொறுப்பாகின்றனர். பொதுமக்கள் இதுபோன்ற விஷயங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இணையவழியில் முன் பின் தெரியாத நபர்களிடம் எந்த முதலீடும் செய்து ஏமாற வேண்டாம் எனவும்" அவர் கேட்டுக்கொண்டார்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: