மதுரை, திருச்சி, விருதுநகர்... 9 மாவட்ட கலெக்டர்கள் திடீர் மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu secretariat

55 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மத்திய அரசு பணியில் இருந்த ராஜேந்திர ரத்னூ தமிழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், பேரூராட்சி இயக்குனராக மாற்றப்பட்டார். திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் மாற்றப்பட்டு, திருச்சி ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

trichy ias

உயர்கல்வித்துறை செயலாளராக  சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். வணிகவரித்துறை செயலாளராக ஷில்பா பிரபாகர்  சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமை செயலராக இருந்த விஜயகுமார் நிலச் சீர்த்திருத்த ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக சீர்திருத்தத் துறை அரசு செயலாளராக வள்ளலார் நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி மனிதவள மேலாண்மைத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபோல நெல்லை, தூத்துக்குடி, ஆவடி ஆணையர்களும் மாற்றப்பட்டனர். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா சமூகநலத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார். இதுபோல  சிவகங்கை,  விருதுநகர், ஈரோடு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட்டனர். 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுளனர்.

9 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்:

திருச்சி மாவட்ட ஆட்சியராக வெ.சரவணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், செங்கல்பட்டு மாவட்ட அட்சியராக சினேகா, மதுரை மாவட்ட ஆட்சியராக பிரவீன் குமார், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சுபபுத்ரா, ஈரோடு மாவட்ட ஆட்சியராக கந்தசாமி, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பொற்கொடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆணையர்கள் மாற்றம்:

சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலராக கோ.பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரி ஆணையராக எஸ்.நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் ஆணையராக அமித், நெல்லை ஆணையராக மோனிகா ராணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜேந்திர ரத்னூ - முதன்மைச் செயலாளர்

ஷில்பா பிரபாகர் சதீஷ் - அரசு செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை

ச.விஜயகுமார் - கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர், நில சீர்திருத்தம்

வள்ளலார் - அரசு செயலாளர், சமூக சீர்த்திருத்தத் துறை

நாகராஜன் - வணிக வரித்துறை ஆணையர்

சங்கர் - அரசு செயலாளர், உயர் கல்வித்துறை

சமயமூர்த்தி - அரசு செயலாளர், மனித வள மேலாண்மைத் துறை

பிரகாஷ் - முதன்மைச் செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்

பிரபாகர் - தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்

வெங்கடேஷ் - அரசு சிறப்புச் செயலாளர், நிதித்துறை

லில்லி - அரசு சிறப்புச் செயலாளர், போக்குவரத்துத் துறை

கணேஷ் - அரசு சிறப்புச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

வீர் பிரதாப் சிங் - அரசு துணைச் செயலாளர், பொதுத் துறை, சென்னை

கே.எம்.சரயு - அரசு இணைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சென்னை

துரை ரவிச்சந்திரன் - துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை

க.கற்பகம் - அரசு இணைச் செயலாளர், உயர் கல்வித்துறை

ஆர்.வி.ஷஜீவனா - மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், சென்னை

ஸ்ரேயா பி.சிங் - மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

ப.மதுசூதன் ரெட்டி - இயக்குநர், நகராட்சி நிர்வாகம்

சு.சிவராசு - மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம்

ஜெ.விஜயராணி - மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்

தா.கிறிஸ்துராஜ் - இயக்குநர், சுற்றுலா மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்

கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் - அரசு கூடுதல் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

ச.உமா - அரசு கூடுதல் செயலாளர், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, சென்னை

வீ.ப. ஜெயசீலன் - இணை ஆணையர் (சுகாதாரம்), பெருநகர சென்னை மாநகராட்சி

மா.சௌ. சங்கீதா - இயக்குநர், சமூக நலம்

மா.பிரதீப் குமார் - இயக்குநர், பேரூராட்சிகள்

ராஜ கோபால் சுன்கரா - இயக்குநர், நில அளவை மற்றும் நிலவரித் திட்டம்

அருண்ராஜ் - மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர்

நாரணவரே மணிஷ் - மாவட்ட ஆட்சியர், திருப்பூர்

வெ.சரவணன் - மாவட்ட ஆட்சியர், திருச்சி

தி.சினேகா - மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு

கே.ஜே.பிரவீன் குமார் - மாவட்ட ஆட்சியர், மதுரை

என்.ஓ.சுகபுத்ரா - மாவட்ட ஆட்சியர், விருதுநகர்

ச.கந்தசாமி - மாவட்ட ஆட்சியர், ஈரோடு

துர்கா மூர்த்தி - மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

கா.பொற்கொடி - மாவட்ட ஆட்சியர், சிவகங்கை

ஆஷா அஜித் - தலைமை இயக்க அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் மற்றும் திட்ட இயக்குநர்

எம்.பி.அமித் - ஆணையர், திருப்பூர் மாநகராட்சி

எச்.ஆர்.கௌசிக் - வட்டார துணை ஆணையர் (மத்தி) பெருநகர சென்னை மாநகராட்சி

மோனிகா ராணா - ஆணையர், திருநெல்வேலி மாநகராட்சி

வி.மதுபாலன் - ஆணையர் , திருச்சி மாநகராட்சி

பானோத் ம்ருகேந்தர் லால் - ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி

ரா.சரண்யா - ஆணையர், ஆவடி மாநகராட்சி

ர. அனாமிகா - இணை ஆணையர், நகராட்சி நிருவாகம், சென்னை

லலித் ஆதித்ய நீலம் - கூடுதல் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, சென்னை

அஃதாப் ரசூல் - வட்டார துணை ஆணையர் (தெற்கு), பெருநகர சென்னை மாநகராட்சி

நிஷாந்த் கிருஷ்ணா - ஆணையர், ஓசூர் மாநகராட்சி

அர்பித் ஜெயின் - ஆணையர், ஈரோடு மாநகராட்சி

ர.அ.பிரியங்கா - கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடலூர்

பல்லவி வர்மா - கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருவாரூர்

அபிலாஷா கௌர் - கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நீலகிரி

திவ்யான்ஷீ நிகம் - கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ராமநாதபுரம்

ஆல்பி ஜான் வர்கீஸ் - இயக்குநர், தலைமை செயல் அலுவலர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை

ம.கோவிந்த ராவ் - மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம்.

Tn Government Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: