Advertisment

Fire Accident: மன்னார்குடி பட்டாசு கிடங்கில் தீ விபத்து - 6 பேர் பலி

அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சுரேஷ், பாபு, சிங்காரவேலு, மோகன், அறிவு, வீரய்யன் ஆகிய 6 பேரும் உடல் சிதறி இறந்தது தெரிய வந்தது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News today live updates

News today live updates

Fire Accident at Mannargudi: மன்னார்குடியிலுள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட, தீ விபத்தில் 6 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Advertisment

திருவாரூர் மாவத்திலுள்ள மன்னார்குடியில் பாமணி ஆற்றங்கரைப் பகுதியில் பட்டாசு கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு திருவிழாவுக்கு தேவையான பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று (27.03.19) காலை அங்கு ஏற்பட்ட தீ விபத்தில், அந்தப் பகுதி முழுவதும் தரை மட்டமானது. தீயணைப்பு துறைக்கு தகவல் சென்றதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சுரேஷ், பாபு, சிங்காரவேலு, மோகன், அறிவு, வீரய்யன் ஆகிய 6 பேரும் உடல் சிதறி இறந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தால் மன்னார்குடி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், தீ விபத்து ஏற்படக் காரணம் என்ன, கிடங்கு வைத்திருப்பதற்கான உரிமங்கள் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Mannargudi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment