scorecardresearch

கோயம்பேடு மார்க்கெட்டில் பிரம்மாண்ட பூங்கா: உருவாகும் புதிய வசதிகள்

கோயம்பேடு மொத்த சந்தை மேம்பாட்டுக்கு 10 கோடி ஒதுக்குவதாக சிஎம்டிஏ அமைச்சகம் பி கே சேகர் பாபு அறிவித்தார்.

park

சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சி.எம்.டி.ஏ.,) கோயம்பேடு சந்தைக்குள் அனைத்து வசதிகளுடன் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பூங்காவை உருவாக்கவுள்ளது.

பூ மார்க்கெட்டுக்குள் அமைக்கப்படும் இந்த பூங்காவில், நடைபயிற்சி மற்றும் ஜாகிங் பாதை, உள்ளூர் மரங்கள் மற்றும் செடிகள், குழந்தைகள் விளையாடும் பகுதி, மாற்றுத்திறனாளிகள் நட்பு வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளும் இருக்கும்.

“இந்தப் பூங்கா பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கும். பூங்காவிற்குள் நுழையும் இடங்களுக்கு வரக்கூடிய இயற்கைக் கட்டிடக் கலைஞரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று CMDA அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோயம்பேடு மொத்த சந்தை மேம்பாட்டுக்கு 10 கோடி ஒதுக்குவதாக சிஎம்டிஏ அமைச்சகம் பி கே சேகர் பாபு அறிவித்தார். பூங்காவைத் தவிர, முக்கியமாக சந்தையில் உள்ள தொழிலாளர்களுக்காக வளாகத்திற்குள் ஒரு மருத்துவமனையும் அமைக்கப்படும். அதில் அவசர சிகிச்சை மற்றும் உள்நோயாளிகளுக்கான வசதி இருக்கும்.

“நாங்கள் சாலைகளையும் மேம்படுத்துவோம், துப்புரவு பணிகள் தொடர்ந்து செய்யப்படும், மேலும் சந்தையின் தளம் சேதம் சரி செய்யப்படும்”, என்றார் சேகர் பாபு.

சந்தையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பொதுவான பகுதியில் ஒளியூட்ட பயன்படுத்தப்படும். “சந்தையைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையையும் நாங்கள் அமைப்போம்” என்று ஒரு அதிகாரி மேலும் கூறினார்.

இந்த அறிவிப்புகளால் மகிழ்ச்சியடைந்த கடைக்காரர்கள், சின்னமயா நகர் சாலையை அணுக 19வது கேட்டை திறக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 7 acre park in chennai koyambedu market minister sekar babu