தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணிந்தீர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பாக இயற்கை வளங்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி,
- கனிம வளத்துறை செயலாளராக இருந்த ஜெயகாந்தன், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- போக்குவரத்து துறை செயலாளர் நிர்மல் ராஜ், கனிமவளத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
- மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குனராக ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
- மதுரை மாநகராட்சி ஆணையராக பிரவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சேலம் மாநகராட்சி ஆணையராக பாலச்சந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“