கோவை போளூவாம்பட்டி வனச் சரகம் நரசீபுரம் பிரிவு பகுதி விராலியூர் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் 73 வயது முதியவர் சின்னகுட்டி. இவர் அங்கு உள்ள வனப் பகுதி ஒட்டியுள்ள பகுதிக்கு இன்று காலை 5 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.
அப்போது திடீரென அங்கு வந்த ஒற்றை யானை முதியவரை தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ஆல்பா குழு வன பணியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அந்த குழுவினரும், ஆலாந்துறை காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
ஆலாந்துறை காவல் துறையினர் முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“