/indian-express-tamil/media/media_files/2024/11/15/lT0U3HzpNtcQ2Ls4c9tb.jpg)
13 ஆவது மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
சென்னை போரூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து குதித்து முதியவர் உயிரிழந்ததையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூரைச் சேர்ந்த சிவக்குமார் என்ற முதியவருக்கு 74 வயது ஆன நிலையில் தனது மனைவி கோதையுடன் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களது மகன்கள் இருவரும் வெளிநாட்டில் பணிபுரிந்து அங்கேயே குடிபெயர்ந்ததாகவும் அவ்வப்போது வந்து பார்த்து சென்றதாகவும் கூறப்படுகிறது/.
இந்நிலையில் சிவக்குமார் தனது மனைவி கோதையுடன் வீட்டில் தனியாக வசித்து வந்ததையடுத்து இன்று (நவம்பர் 11) காலை பால்கனியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.
அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிவக்குமார் உடலை கைப்பற்றி தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.