/indian-express-tamil/media/media_files/2024/12/19/1rkbeGErKIApcdVMJEgU.jpg)
தமிழ்நாடு காவல்துறையில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை (04.04.2025) உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையில் நிர்வாகக் காரணங்கள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக அவ்வப்போது ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாடு காவல்துறையில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை (04.04.2025) உத்தரவிட்டுள்ளது.
ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் விவரம்:
குடிமைப் பொருள் துறை டி.ஜி.பி-யாக இருந்த சீமா அகர்வால் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி.யாக சீமா அக்ரவால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குடிமைப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கல்துறை சி.ஐ.டி ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா கூடுதல் பொறுப்பாக அத்துறையின் டி.ஜி.பி. பொறுப்புகளை கவனித்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் துறை தலைமையக ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி சென்னை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எஸ் அதிகாரி கபில் குமார் ஷரத்கர் சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி. ஜி.கார்த்திகேயன், சென்னை போக்குவரத்துத்துறை ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை இணை ஆணையர் சந்தோஷ் குமார், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஐ.ஜி. சத்யப்ரியா காவலர் நலன் பிரிவு ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவலர் நலன்பிரிவு டி.ஐ.ஜி. எம்.துரை காவல் துறை தலைமையக டி.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.