/tamil-ie/media/media_files/uploads/2017/07/a801.jpg)
கிரானைட் மோசடி புகார் தொடர்பாக விசாரணை செய்யும் குழுவில் உள்ள ஓய்வு பெற்ற தாசில்தார் உள்ளிட்டவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த ஓய்வு பெற்ற தாசில்தார் மீனாட்சி சுந்தரம் என்பவருக்கு 20ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், முறைகேடு தொடர்பாக புகார்கள் பெற அமைக்கப்பட்ட அலுவலகத்துக்கு நிர்வாக செலவுகள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே மீனாட்சி சுந்தரத்துக்கான ஊதியத்தையும், அலுவலக நிர்வாக செலவு தொகையையும் உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தரப்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் முறையீடு செய்தார். மேலும் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும் அதை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அனுமதியளித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.