Advertisment

கே.ம்.சி.ஹெச் மருத்துவமனையில் கொலை: 8 பேருக்கு நீதிமன்ற காவல்

8 பேர் பீளமேடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் முகமூடி அணிந்தபடி காவல் நிலையத்தில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Chennai

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் 8 பேருக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஜூன் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH மருத்துவமனையில் அங்கு பணிபுரியும் செக்கியூரிட்டி மற்றும் நிர்வாகத்தினர்களால் ராஜா என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். 

Advertisment

இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை துணை தலைவர் நாராயணன், வர்த்தக பிரிவு மேலாளர் சசிகுமார், தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ரமேஷ், மருத்துவமனை நெட்வொர்க் பிரிவு அலுவலர் சரவணன் மற்றும் காவலாளிகள் சரவணகுமார், மணிகண்டன், சதீஷ்குமார், சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் பீளமேடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் முகமூடி அணிந்தபடி காவல் நிலையத்தில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  இந்த வழக்கு விசாரித்த  நீதிபதி வருகின்ற ஜூன் 12-ம் தேதி வரை 8 பேரையும் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

செய்தியாளர் பி ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment