திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் அடுத்தடுத்து 8 பேர் சிகிச்சை பெற்று உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
சம்பவம் குறித்த தகவல்கள் வெளிவந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ஞான மீனாட்சி நேற்று சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், எட்டு பேர் உயிரிழந்தது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பல் மருத்துவருக்கு விளக்கம் கேட்டு திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.