Advertisment

தேனி அருகே 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 8 சபரிமலை பக்தர்கள் பலி

தேனி அருகே சபரிமலை பக்தர்கள் சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

author-image
WebDesk
New Update
டெல்லியில் கார் மோதி 4 கிமீ தூரம் இழுத்துச் சென்றதில் பெண் மரணம்; 5 பேர் கைது

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய போது, தேனி அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். தேக்கடி-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Advertisment

மலைப்பாதையில் கார் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக அதிகாரி தெரிவித்தார்.

சிறுவர் ஒருவர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் என்றும் சபரிமலையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாகவும் அதிகாரி கூறினார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment