/tamil-ie/media/media_files/uploads/2022/12/FEtQacVVEAM12qK.jpg)
சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படுமா என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.
இதை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது ஒரு கொள்கை முடிவு. ஏனென்றால், ஏற்கனவே தமிழக அரசு 8 வழிச்சாலை திட்டத்தை மக்களிடம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பிற்கு பிறகு பல்வேறு அரசியல் கட்சியினர், பொது அமைப்புகள் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த திட்டத்திற்கு எதிராக யுவராஜ் என்பவர் தாக்கல் செய்த மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பலர் கடிதம் எழுதி அவர்களது கருத்துக்களை எங்களிடம் தெரிவித்தார்கள். அப்போது நாங்கள் கூறியது ஒரு பதில் தான்.
இது ஒரு கொள்கை முடிவு என்றும், இதில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்து, அனைவரும் கலந்துரையாடி தான் அறிவிக்க முடியும்", என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.