Advertisment

கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் நாளை 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

author-image
WebDesk
New Update
police2

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிச.25) உலகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது.  ஏயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் மக்கள் தங்கள் வீடுகளில் குடில் அமைத்தும், வண்ண விளக்குகளால் அலங்கரித்தும் கிறிஸ்துமஸை வரவேற்கின்றனர். 

Advertisment

நாளை தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள், கொண்டாடங்கள் நடைபெற உள்ளது.  இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னையில் இன்றிரவு முதல் நாளை வரை 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் கொண்டாட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 350 தேவாலயங்களில் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மெரினா, சாந்தோம் பெசன்ட் நகர், உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்லும் மக்கள் கடலில் இறங்காதவாறு கண்காணிக்கப்பட உள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சி.சி.டி.வி கேமரா, டிரோன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. சென்னையில் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

Advertisment
Advertisement

மேலும், பைக் ரேஸ், மது போதையில் வாகனங்கள் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment