/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-91.jpg)
scholarships available for engineering students
Pongal Holidays : இன்னும் சில தினங்களில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11 முதல் இம்மாதம் 19-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் அவதூறு வழக்கு
தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கும் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குனர் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு இந்த 9 நாட்கள் விடுமுறையில் ஜனவரி 13 மற்றும் ஜனவரி 14 ஆகிய தேதிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியூரில் தங்கி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு காதில் தேன் பாய்ந்தது போன்ற உணர்வை தந்திருக்கிறது. பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடவும், குடும்பத்துடன் நேரத்தைக் கழிக்கவும் இந்த விடுமுறை அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
தவிர, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.
தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!
அதே போல் ஜனவரி 13-ம் தேதியைத் தவிர மற்ற நாட்களில் நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தசரா பண்டிகைக்கு அக்டோபர் 17 முதல் 26 வரையிலும், கிறிஸ்துமஸுக்கு டிசம்பர் 25 முதல் 31 வரையிலும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதோடு கோடை விடுமுறையாக மே 1 முதல் 31 வரையிலும் விடுமுறை விடப்படும்.
தவிர ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் வங்கிகளும் செயல்படாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.