Advertisment

கோவை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள், தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரிடம் விசாரணை

author-image
WebDesk
New Update
Gold sei.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சிங்கப்பூரிலிருந்து வரும் ஸ்கூட் விமானத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Advertisment

அப்போது சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் விமான பயணி ஒருவரை சோதனை செய்தபோது அவரிடம் 10 தங்க கட்டிகள், 2 தங்க செயின்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் கடத்திவரப்பட்ட ரூ. 90 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வருவாய்  புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  மேலும் பிடிபட்ட நபரிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

     

    coimbotore
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment