Advertisment

ஆங்கில ஆசிரியை உடன் காதல்; மாயமான 17 வயது மாணவன்: திடுக் தகவல்கள்

17 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த பள்ளி ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சேலையூர் போலீசார்..

author-image
WebDesk
New Update
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மரண வாக்குமூலம் அடிப்படையில் கைதான கொடூரன்

மாணவன் பெற்றோர் இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

crime | சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவர் மாயமானார். இந்த மாணவனுக்கு பள்ளி ஆங்கிலப் பள்ளி ஆசிரியை 28 வயதான ஹெப்சிபா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவன் மாயமாகி உள்ளார். மாணவன் மாயமான நிலையில் அவரது பெற்றோர் இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் மாணவர் பள்ளி ஆசிரியை ஹெப்சிபா உடன் காதல் வயப்பட்டது தெரியவந்தது.

மேலும் அவர்கள் தாழம்பூரில் தனியாக வீடு எடுத்து வசித்துவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் அபபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மாணவன் உடன் ஆசிரியைக்கு பழக்கம் இருப்பது தெரிந்து பள்ளி நிர்வாகம் 15 நாள்களுக்கு முன்பு அவரை பணியை விட்டு நீக்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Crime
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment