/indian-express-tamil/media/media_files/FMBXjWPKVbXUSBZZp98I.png)
கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்ற பாஜக உள்ளூர் நிர்வாகியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 15, 2024) மாலை பாஜக சார்பில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க தவறிய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அத்திப்பட்டு துரைக்கண்ணு என்பவர் கண்டன உரையாற்றினார். அப்போது, “உங்களின் பொன்னான வாக்குகளை கை சின்னத்தில் அளியுங்கள்” என்றார்.
தொடர்ந்து தனது தவறை உணர்ந்து தாம் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் தவறுலாக கூறிவிட்டேன்; மன்னித்து விடுங்கள், தவறுதலாக கூறிவிட்டேன். பிரதமர் மோடிக்காக தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்” என்றார்.
இவர் அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தவர் ஆவார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் இப்ராகிம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். பாரதிய ஜனதா கட்சி மேடையில் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்ற துரைக் கண்ணுவின் பேச்சு பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே சிரிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.