Villupuram Kandambakkam railway station: விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “இந்தத் தாக்குதலில் பிரபல ரவுடி நாராயண சாமி என்பவர் ஈடுபட்டுள்ளார். இதில், பரணிதரன் என்பவர் படுகாயம் அடைந்தார்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் வேறு எவருக்கும் இந்தத் தாக்குதலில் காயமோ உயிர்சேதமோ ஏற்படவில்லை.
சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்து முழுமையான தகவல்கள் விசாரணைக்கு பிறகே வெளிவரும்” என்றார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“