/tamil-ie/media/media_files/uploads/2023/06/ADMK-Trichy.jpg)
திமுக அரசை கண்டித்து திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை (ஜூன் 21) நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பிமான ப.குமார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான பரஞ்சோதி, அதிமுக அமைப்புச் செயலாளர் டி.இரத்தினவேல், முன்னாள் அமைச்சர்கள் மோகன், சிவபதி, வளர்மதி, மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட 700 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.