கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் சி.எஸ்.ஐ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்துள்ளார்
இவர் பள்ளியில் படிக்கும் போதே மோட்டார் வாகனம் மீது அதிகமான ஆர்வம் கொண்டவர் ஆவார். இவருக்கு இரு சக்கர வாகனம் வாங்க முடியவில்லை என்றாலும் இவரது வாயில் மூலமாக பந்தயத்தில் கலந்து கொள்ளும் இரு சக்கன வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சவுண்டுகளை தத்ரூபமாக ஒலி எழுப்புகிறார்.
இவருக்கு இரு சக்கர பந்தயங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் பங்கு பெறுவேன் என ஆர்வமாக தெரிவிக்கிறார்.
மேலும் இவர் அந்த ஒலி எழுப்பும் திறமையை பெற்றோர்கள் அவரது நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் இவருடைய இவ் ஒலி எழுப்பும் திறமையை பகிரப்பட்டு பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“