Advertisment

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகம் புகார்: என்ன காரணம்?

சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மீது, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கு.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் மணி ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Supreme Court quashes FIR on Article 370 protest and Educate cops on free speech Tamil News

சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மீது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் மே மாதம் அன்னதானம் நடைபெறும். அப்போது அங்குள்ள எச்சில் இலைகளின் மீது பக்தர்கள் உருளும் சடங்குக்கு 2015 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடையானது கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. இந்தத் தடைக்கு எதிராக கரூரைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  மனுதாரரின் வாதங்களை ஏற்றுக்கொண்டு,  சம்பந்தப்பட்ட சடங்குக்கு அனுமதி அளித்து  உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கு ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திர சூட்டியிடம் முறையிட்டுள்ளனர்.

Advertisment

அந்தப் புகாரில்,  எச்சில் இலை மீது உரலும் சடங்குக்கு தடை விதிக்கப்பட்ட கடந்த கால தீர்ப்புகளை சுட்டிக்காட்டி உள்ளனர்.  தொடர்ந்து நீதிபதியின் கடந்த கால தீர்ப்புகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கோரி உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment