Advertisment

சென்னை தி.மு.க நிர்வாகி நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை: நடந்தது என்ன?

திமுக நிர்வாகியான ஆராமுதன், கட்சி அலுவலகத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்போது நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் வெட்டியும் மர்மநபர்கள் படுகொலை செய்தனர்.

author-image
WebDesk
New Update
Chennai DMK official murdered

சென்னை தி.மு.க நிர்வாகி நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையை அடுத்த வண்டலூரை சேர்ந்தவர் ஆராமுதன். இவர், காட்டாங்குளத்தூர் ஒன்றிய துணை தலைவராகவும், திமுக ஒன்றிய செயலாளருமாக இருந்து வந்தார்.

Advertisment

இவர் வியாழக்கிழமை (பிப்.29,2024) இரவு கட்சி அலுவலகத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் வெட்டியும் சரமாரியாக தாக்கினர்.

இதில் ரத்த வெள்ளத்தில காயங்களுடன் கிடந்த ஆராமுதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆராமுதன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவ பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட ஆராமுதன் அமைச்சர் தா.மோ. அன்பரசனின் தீவிர விசுவாசி என்று கூறப்படுகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment