மனைவியை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கீ செயின் கலாசாரம் மேற்கத்திய நாடுகளில் காணப்படுகிறது. அண்மையில் கடற்படையில் இந்த கலாசாரம் காணப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், "மனைவி பரிமாற்றம்" என்ற போர்வையில் செயல்பட்டு வரும் விபச்சார கும்பல் ஒன்று சென்னையில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் எட்டு ஆண்டுகளாக இந்த மோசடி நடந்து வந்துள்ளது. இதன் அமைப்பாளர்கள் ஒற்றை ஆண்களை குறிவைத்து, பெண்களை அவர்களின் மனைவிகளாக அறிமுகப்படுத்தி பங்குதாரர்களை மாற்றிக் கொள்ள அவர்களை ஊக்குவித்தார்கள்.
இதனை விளம்பரப்படுத்த சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் இந்தக் கும்பல் இதற்காக ₹13,000 முதல் ₹25,000 வரை வசூலித்துள்ளது.
இது குறித்து தகவலின் பேரில் சென்னை பனையூரில் போலீசார் 8 பேரை கைதுசெய்தனர். மேலும் பல்வேறு பெண்கள் மீட்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் தலைநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இவர்கள் சென்னை, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட நகரங்களிலும் செயல்பட்டுவந்துள்ளனர். இந்த வழக்கில் செந்தில் குமார், குமார், சந்திரமோகன், சங்கர், வேல்ராஜ், பேரரசன், செல்வன் மற்றும் வெங்கடேஷ் குமார் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றங்களில் 30 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட பெண்களை ஈடுபடுத்தி உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“