திருடர், ஊழல் பட்டம் கொடுத்தவரை வைத்தே தி.மு.க விழா; அண்ணாமலை சாடல்

முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர் சந்திப்பில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர் சந்திப்பில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

author-image
WebDesk
New Update
Annamalai trichy meeting

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, சென்னை மணலியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார். அவரது பேச்சில், திமுக, காங்கிரஸ், அதிமுக மற்றும் நடிகர் விஜய் தொடர்பான விமர்சனங்கள் முக்கிய இடம் பிடித்தன.

Advertisment

அண்ணாமலை தனது பேச்சில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். குறிப்பாக, 'சாராயம் விற்ற காசில் தான் திமுக முப்பெரும் விழா கரூரில் நடந்துள்ளது' என்று குற்றம்சாட்டினார். மேலும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான செந்தில் பாலாஜியை திமுக பாராட்டியதை சுட்டிக்காட்டி, 'ஊழல் பட்டம் தரப்பட்ட செந்தில் பாலாஜியை வைத்து திமுக முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது' என்றார்.

அதேபோல், காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு 'எடுபிடியாக' மாறிவிட்டதாக விமர்சித்த அண்ணாமலை, அக்கட்சி தனது பெயரை 'எடுபிடி கட்சி' என்று மாற்றிக்கொள்ளலாம் என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும், மு.க. ஸ்டாலினின் காவிரி குறித்த நிலைப்பாட்டை விமர்சித்து, 'மண் குதிரையை நம்பி காவிரியை நோக்கி புறப்பட்டுள்ளார்' என்றும் தெரிவித்தார். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட 256 திட்டங்களை திமுக அரசு திரும்பப் பெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதிமுக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, 'என்.டி.ஏ.வில் இருந்து வெளியேறிய தினகரனை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்' என்று தெரிவித்தார். மேலும், பன்னீர்செல்வம், தினகரன் போன்றோரை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றும் கூறினார். 'ஒரு கூட்டணியில் எவ்வளவு தலைவர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு சந்தோஷம்' என்று தெரிவித்தார்.

Advertisment
Advertisements

அதிமுக ஆட்சியை பாஜக காப்பாற்றியதாக எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தை வரவேற்ற அண்ணாமலை, 'அது உண்மை' என்று உறுதிப்படுத்தினார். மேலும், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் பழனிசாமிதான் என்றும், அதற்காக பாஜக உழைக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். இது, தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணியின் பிணைப்பை மேலும் வலுப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்துப் பேசிய அண்ணாமலை, 'விஜய்க்கு வரும் கூட்டம் அமைதியாக வந்து சென்றால் சந்தோஷம்' என்று கூறினார். மேலும், பொது நிகழ்ச்சிகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் விஜய் மற்றும் அரசுக்கு பொறுப்பு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.  

'மக்கள் வரிப்பணத்தில் ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காத நான் கணக்கு காட்ட வேண்டியுள்ளது. என் சொந்த சம்பாத்தியத்துக்கும் நான் கணக்கு காட்ட வேண்டி உள்ளது' என்று அண்ணாமலை தெரிவித்தார். இதன்மூலம், அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட நிதி விவகாரங்கள் குறித்த விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்துள்ளார். 

Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: