/indian-express-tamil/media/media_files/cXVYQt8kRlLNMI9LrQ1O.jpg)
திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
rain | tirunelveli | அதிகனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, திசையன்விளை, கூடங்குளம், செட்டிக்குளம், பணகுடி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது.
இந்த நிலையில் அதிமழை காரணமாக பாதுகாப்பு கருதி பாபநாசம் மற்றும் சேர்வலாறு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியம் 2 மணிக்கு 14 கனஅடி நீரும், மாலை 4 மணிக்கு 30 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட உள்ளது.
இதனால பாதுகாப்பு கருதி திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்துவருகிறது. இந்த கனமழை நாளையும் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பதிவிட்டுள்ள வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான், “சம்பவம் தொடர்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.