சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்: கோவையில் பரபரப்பு

கோவை உப்பிலிபாளையம் அருகே சாலையின் நடுவே ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை உப்பிலிபாளையம் அருகே சாலையின் நடுவே ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Covai big hole

சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்: கோவையில் பரபரப்பு

கோவை உப்பிலிபாளையம் அருகே சாலையின் நடுவே ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். உப்பிலிபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததாலும், அதே இடத்தில் குடிநீர் இணைப்பு குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யாததும் மண்ணரிப்பு ஏற்பட்டு பள்ளம் உண்டானதாக அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர். 

Advertisment

Covai big holeநல்வாய்ப்பாக சாலைப் போக்குவரத்து மிகுந்த அந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டபோது வாகனம் எதுவும் செல்லாததால் அசம்பாவிதங்கள் நிகழவில்லை. இந்நிலையில், தகவலறிந்து விரைந்த மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை மூடி குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நிலவக்கூடிய மிகப்பெரிய பிரச்னைகளில் இதுவும் ஒன்று. பாதாள சாக்கடை திட்டப்பணிகள், 24 மணி குடிநீருக்கான சூயஸ் திட்டம் போன்றவற்றிற்கு சாலைகளின் நடுவே தோண்டப்படும் குழிகள் சரிவர மூடப்படுவதில்லை என்கின்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் அஜாக்கிரதையாக செயல்படும் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: