Advertisment

போனஸ் கூட கொடுக்க யோசிக்கும் காலத்துல: ஊழியர்களுக்கு கார், பைக் கொடுத்த நகை கடை உரிமையாளர்

சென்னையில் உள்ள நகைக்கடை உரிமையாளர் தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்கை தீபாவளி பரிசாக கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
போனஸ் கூட கொடுக்க யோசிக்கும் காலத்துல: ஊழியர்களுக்கு கார், பைக் கொடுத்த நகை கடை உரிமையாளர்

சென்னையில் உள்ள நகைக்கடை உரிமையாளர் தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்கை தீபாவளி பரிசாக கொடுத்துள்ளார்.

தீபாவளி என்றதும் பண்டிகை என்பதைவிட, நமது அலுவலகத்தில் இதுவரை நாம் வேலை செய்த பணிக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்று ஊழியர்கள் எதிர்பார்ப்பார்கள். இன்றைய தனியார் நிறுவனங்களில் போனஸ் என்ற கேள்விக்கே இடம் இல்லை என்பதால் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. இப்படி இருக்கும் நிலையில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தனது ஊழியர்களை பாராட்டி கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கி உள்ளார்.

சென்னையில் இயங்கி வரும் ’CHALLANI’ என்ற நகை கடையின் நிறுவனர்  ஜெயந்தி லால். இவர் தனது ஊழியர்களில் 10 பேருக்கு காரும், 20 பேருக்கு இருசக்கர வாகனமும் பரிசாக வழங்கி உள்ளார். மேலும் இவர் கூறுகையில் “தனது உயர்வு மற்றும் தாழ்வான நேரங்களில் என்னோடு பயணித்த ஊழியர்களை, நான் என் குடும்பமாக நினக்கிறேன். இதனால் அவர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்விக்க நினைத்தேன்” என்று கூறியுள்ளார்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment