வால்பாறை அருகே காட்டெருமை தாக்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வால்பாறை அருகே எஸ்டேட் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகே எஸ்டேட் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Bison attack

கோவை  மாவட்டம், வால்பாறை அடுத்த கேரள எல்லை பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட்டில் ஏராளமானோர் தோட்டத் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். இதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கார்ன் சஞ்சய் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

Advertisment

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு சுமார் 7 மணியளவில் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, தேயிலை செடிகளுக்கு இடையே நின்று கொண்டிருந்த காட்டெருமை, எதிர்பாராத விதமாக இவரை தாக்கியது.

இதில் பாதிக்கப்பட்ட கார்ன் சஞ்சயை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவருக்கு மருத்துவமனையில் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death Valparai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: