New Update
/indian-express-tamil/media/media_files/KXJ4RiwHXaALY3W0wbdq.jpg)
வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி பெண் குடும்பத்துடன் உயிரிழந்தார்.
Wayanad landslide | நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கரன்சி பகுதியை சேர்ந்த பெண் குடும்பத்துடன் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி பெண் குடும்பத்துடன் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கோர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல உயிர்கள் பலியாகின. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள கரன்சி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் சந்திரலேகா தம்பதியரின் மகள் கௌசல்யா (26) என்பவர் குடும்பத்துடன் பலியான அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வயநாடு சூரர் மலை பகுதியை சேர்ந்த விஜிஸ் குட்டன் (36) என்பவரை திருமணம் செய்து குடும்பத்துடன் சூரர் மலைப்பகுதியில் வசித்து வந்தார்.
விஜிஸ் குட்டன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குடும்பத்துடன் உயிரிழந்தனர்.
உடலை குன்னூருக்கு கொண்டு வர இயலாததால் அங்கேயே தகனம் செய்துவிட்டனர். குன்னூர் பகுதியைச் சேர்ந்த பெண் வயநாடு கோர விபத்தில் உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்தியாளர் பி ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.