தீபாவளி பண்டிகை தொடர்பாக ஆ.ராசா பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
திமுக தலைவர்கள் பொதுவாக தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை. முதல்வர் ஸ்டாலின் இந்த முறை வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தீபாவளி பண்டிகை தொடர்பாக ஆ.ராசா பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவில் அவர் பேசியதாவது“ இந்த பூமா தேவி என்ற பூமியை பத்மாசுரன் என்ற அசுரன் என்று தான் தொடங்குகிறது. நல்லா தெரிந்துகொள்ளுங்கள் அசுரன் என்றாலே திராவிடன். தேவர் என்றால் அவர்கள் பிராமிணர்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடக்கும் போராட்டம்தான் உண்மையான மனித போராட்டம் . இதை நான் சொல்லவில்லை நேரு சொல்லியிருக்கிறார். திராவிடர்களுக்கும்– ஆரியர்களுக்கும் நடக்கும் போராட்டத்தின் விளைவுதான் வரலாறு என்று அவர் சொல்லியிருப்பார்.
பத்மாசுரன் என்ற அசூரன் பூமியை பாயாக சுருட்டினார் என்று கூறப்படுகிறது. அங்கே பிரச்சனை தொடங்கிவிட்டது. உலகம் உருண்டைதானே. 1600ல் புருனோ என்ற கிறிஸ்துவன் உலகம் உருண்டையானது என்று கூறினார். ஆனால் அவரது கூற்றை அவரது மதத்தைச் சேர்ந்தவர்களே கேட்கவில்லை. உலகம் உருண்டை என்று பைபிலில் இல்லை. அவரை எரித்து கொன்றனர். 400 ஆண்டுகளுக்கு பிறகு அவரை எரித்த இடத்திலேயே அவருக்கு ஒரு சிலையை வைத்து, போப் ஆண்டவர் ஜான் 2ம் பால், உலக நாடுகளிடையே மனிப்பு கேட்டார்.
ஆனால் இந்து மதத்தில் பத்மாசூரன் என்பவன் உலகை பாயாகச் சுருட்டி கடலுக்குள் வைத்தாக கூறுகிறார்கள். கடல் எங்கே இருக்கிறது. அதுவும் பூமியில்தான் இருக்கிறது. பூமா தேவியை மீட்க வேண்டும் என விஷ்ணுவிடம் தேவர் முறையிட்டதால், அவர் பன்றியாக மாறி கடலுக்குள் சென்று, புமா தேவியை மீட்டதாக கூறப்படுகிறது. மேலும் பூமாதேவிக்கும் பன்றிக்கும் காதல் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள். இது அறிவியலுக்கும், பகுத்தறிவிக்கும் ஒவ்வாத வகையில் இருப்பதாலே நாங்கள் வாழ்த்து சொல்வதில்லை” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“