Advertisment

பயத்தில் வடநாட்டு தலைவர்கள்.. துணிச்சலாக களமிறங்கிய மு.க. ஸ்டாலின்: ஆ. ராசா பரப்புரை

'தமிழ்நாடுக்கு எதுவும் செய்யாமல் இங்கு தேர்தலுக்காக ஐந்து முறை மோடி வந்துள்ளார் இன்னும் ஜந்து முறை வருவார்; ஆனால் தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது' என ஆ.ராசா பேசினார்.

author-image
WebDesk
New Update
A Raja.

வடநாட்டு தலைவர்கள் பயந்து கிடக்க, மு.க. ஸ்டாலின் மோடியை எதிர்க்கிறார் என ஆ.ராசா பேசினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

A Raja | Lok Sabha Election | Coimbatore | டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கைது செய்யப்பட்டு வடநாட்டு தலைவர்கள் எல்லாம் பயந்து கிடக்கும் போது துணிச்சலாக மோடியை எதிர்த்து தனியாளாக  களமிறங்கியுள்ளார்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என மேட்டுப்பாளையத்தில் ஆ.ராசா தேர்தல் பரப்புரை செய்தார்.

Advertisment

நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக ஆ.ராசா அறிவிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் வருகை தந்த ஆ.ராசாவுக்கு திமுக மற்றும் இதன் கூட்டணி கட்சினர் இணைந்து சிறப்பான வரவேற்பளித்தனர்.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே கூடிய திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர், விசிக உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா, "அரசியல் சாசனத்தை காப்பாற்றவில்லை என்றால் இந்தியா உடைந்து போகும்..எனவே இந்திய அரசியல் சட்டத்தை காப்பாற்ற மோடி தோற்கடிக்கப்பட வேண்டும்.

ஜார்கண்ட்முதல்வர் மட்டுமல்ல நாட்டின் தலைநகரான டெல்லியின் முதலமைச்சர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ள நிலையில் வடநாட்டு தலைவர்கள் எல்லாம் பயந்து சாகும் நிலையில் மோடியை எதிர்க்க துணிச்சலாக தனியாளாக களமிறங்கியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடுக்கு எதுவும் செய்யாமல் இங்கு தேர்தலுக்காக ஐந்து முறை மோடி வந்துள்ளார் இன்னும் ஜந்து முறை வருவார்; ஆனால் தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது என பேசினார்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore A Raja Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment