Advertisment

பக்ரீத் பண்டிகை; தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்: தேதி, நேரம் செக் பண்ணுங்க

இந்த ரயில் இன்று (ஜூன் 14, 2024) இரவு 10.20 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து தொடங்கி நாளை (சனிக்கிழமை) மதியம் 11 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

author-image
WebDesk
New Update
railway Train

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பக்ரீத் பண்டிகையையொட்டி தாம்பரம்- நாகர்கோவில் இடையே ஜூன் 14 மற்றும் ஜூன் 16 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி இந்த ரயில் இன்று (ஜூன் 14, 2024) இரவு 10.20 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து தொடங்கி நாளை (சனிக்கிழமை) மதியம் 11 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

அதேபோல், சனிக்கிழமை மதியம் 1.20 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு ஜூன் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

அதேபோல், ஜூன் 16ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கும் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து ஜூன் 17ஆம் தேதி புறப்பட்டு ஜூன் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடையும்.

இந்தத் தகவல்கள் தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வே பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Special Trains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment