Tamilnadu government: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
முதல்கட்டமாக பயனாளிகளின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற தகவல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது.
மேலும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 1 ரூபாய் செலுத்தி நேரடியாக வரவு வைக்கப்படுகிறதா? என்பது குறித்தும் சோதிக்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தகவலும் ஒரு சில விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2019 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தால் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக வரும் செப்.15ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கிவைக்கப்பட உள்ளது.
இது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தொடக்க விழாவானது வருகிற 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையிலும் நடைபெற இருக்கிறது” என்றார்.
இந்தத் திட்டத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும்.
இது குறித்து மு.க. ஸ்டாலின், “ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் மாபெரும் திட்டம் இது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் மாதம் தோறும் பயனடையும் திட்டம் இது” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“