தும்பிக்கை இல்லாத ஒரு வயது யானை.. கோவை வனப் பகுதியில் சிக்கியது

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே தமிழக கேரளா வனப்பகுதி ஒட்டி தும்பிக்கை இல்லாமல் இருக்கும் ஒரு வயதான காட்டு யானை குட்டி தென்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே தமிழக கேரளா வனப்பகுதி ஒட்டி தும்பிக்கை இல்லாமல் இருக்கும் ஒரு வயதான காட்டு யானை குட்டி தென்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
A trunkless elephant in Valparai forest

வால்பாறை காட்டுப்பகுதியில் தென்பட்ட தும்பிக்கை இல்லாத ஒரு வயது யானைக் குட்டி.

கோவை மாவட்டம் வால்பாறை தமிழக- கேரளா எல்லை வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி,காட்டு மாடு, காட்டுயானை கூட்டங்கள் அதிக அளவில் உள்ளன.
தற்போது கோடை வெயில் தாக்கத்தினால் காட்டு யானை கூட்டங்கள் நீர் நிலைகளை தேடி வருகின்றன.

தும்பிக்கை இல்லாத யானை

Advertisment

தமிழ்நாடு மற்றும் கேரளா வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகள் கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் யானை கூட்டத்தில் தும்பிக்கை இல்லாத ஒரு வயதான குட்டி யானை ஆற்றைக் கடக்கும் பொழுது பொதுமக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.

அதிகாரிகள் தகவல்

Advertisment
Advertisements

மேலும் தூம்பிக்கை இல்லாத ஒரு வயது ஆன யானை யானை கூட்டத்துடன் உள்ளது எனவும் தும்பிக்கை இல்லாட்டியும் யானை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.
மேலும், தும்பிக்கை இல்லாவிட்டாலும் நம்பிக்கையுடன் குட்டி யானை இருப்பது மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாகி உள்ளது என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: